1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (12:53 IST)

சசிகலா அத்தையின் சிறை தண்டனைக்குப் பின் சதி உள்ளது - ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 

 
ஜெ.வின் அண்ணன் மகளான தீபா, சசிகலாவிற்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். ஆனால், தீபாவின் சகோதரர் தீபக்கை தங்கள் பக்கம் சாய வைத்துள்ளது சசிகலா தரப்பு. 
 
இந்நிலையில், நேற்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேச, டி.டி.வி. தினகரனோடு தீபக்கும் சென்றார். அப்போது காரில் இருந்த படியே அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது “ சசிகலா அத்தை சிறையில் இருப்பதற்கு பின்னணியில் பெரிய சதி உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால், எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறோம்” என அவர் கூறினார்.

ஜெ.வை அடக்கம் செய்யப்படுவதற்கு முன் சசிகலாவோடு சேர்ந்து, இவரும் இறுதிச் சடங்க செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.