திருமணமான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள அரசியல்வாதி.. கடும் கண்டனங்கள்..!
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் தேர்தலில் வெற்றிக்கு பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூர் தலைவர் சைதாலி மஜீத் என்பவர், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வேட்பாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த மஜீத், தங்கள் கட்சி பெண்களை "பிற ஆண்களுக்கு முன்னால் காட்சிப்படுத்துவதற்காக திருமணம் செய்யவில்லை" என்று கூறினார். அத்துடன், திருமணமான பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தகாத மற்றும் இழிவான குறிப்புகளையும் அவர் வெளிப்படையாக பேசினார்.
அவர், "ஓர் ஓட்டுக்காக, அவர்கள் மற்ற ஆண்களுக்கு முன்னால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட மாட்டார்கள். எங்கள் வீட்டிலும் திருமணமான பெண்கள் இருக்கிறார்கள்... அவர்கள் தங்கள் கணவர்களுடன் உறங்கத்தான்" என்றும் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆற்றிய சைதாலி மஜீத்தின் இந்த உரை, அதன் இழிவான மொழி மற்றும் உள்ளடக்கம் காரணமாகக் கேரள அரசியல் களத்தில் கடுமையான கண்டனங்களைத் தூண்டியுள்ளது.
Edited by Siva