வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (13:49 IST)

கொள்ளை, கற்பழிப்பு, கொலை : ஒரே வீட்டில், ஒரே இரவில் நேர்ந்த கொடுமை

வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்த வீட்டில் உள்ள தம்பதியினரை கொன்றுவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஹரியானா மாநிலத்தின் மீவட் என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் சிலர், வீட்டில் இருந்தவர்களை கட்டிபோட்டுவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
 
பின்னர், அந்த வீட்டில் உள்ள பெண்ணையும், சிறுமியையும் வீட்டிற்கு பின் புறத்தில் இருந்த தோட்டத்திற்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த தம்பதியினரை கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.