வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (08:51 IST)

பாதி எரிந்த உடலை தூக்கிச் சென்ற உறவினர்கள்! கொரோனாவால் இறந்தவருக்கு இறுதிச் சடங்கு மறுப்பு!

கொரோனாவால் இறந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரின் உடலை எரிக்க விடாமல் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனாவால் இந்தியாவில் தினமும் பலபேர் இறந்து வருகின்றனர். அவர்களின் உடலை புதைக்கவோ அல்லது இறுதி மரியாதை செய்யவோ அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை அரசு அதிகாரிகள் துணையோடு அடக்கமும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் மக்கள் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்போது அது போன்றதொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 72 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்ற ஊரிலேயே அடக்கம் செய்ய முடிவுசெய்துள்ளனர். ஆனால், அப்பகுதியில் மக்கள் ஒரு கும்பலாக சேர்நது உடலை எரிக்க மறுப்பு தெரிவித்து, கற்களால் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி சென்று வேறொரு இடத்தில் எரித்துள்ளனர். இது சம்மந்தமான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.