வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (11:47 IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் காகா மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


 


ஹரியானா மாநிலம் ரோடக் நகரைச் சேர்ந்தவர் அசோக் காகா. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இவர் ஹோடா முதலமைச்சராக இருந்த போது அவரது உதவி யாளராக பணியாற்றியவர்.
 
இந்நிலையில்,  அசோக் காகா ரோடக் நகரில் தனது வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
 
அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
 
இதனால், உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அசோக் காகா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
 
இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவ்ர ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
 
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து விசாரடிண நடத்தி வருகின்றனர்.