வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (04:22 IST)

காங்கிரஸ் எம்.பி. அதீர் ரஞ்சன் சௌதுரி ஒரு நாள் சஸ்பெண்ட்

மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. அதீர் ரஞ்சன் சௌதுரி ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 

 
ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் எழுப்பி வருகிறது.
 
இந்நிலையில், திங்கள்கிழமை காலை மக்களவை தொடங்கியதும், லலித் மோடி விவகாரத்தை கையில் எடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி. அதீர் ரஞ்சன் சௌத்ரி பதாகைகளை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டார்.
 
பின்பு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டு பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எம்.பி.அதிர் ரஞ்சன் சௌத்ரியை, கூட்டத் தொடரில் இருந்து ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
 
அதீர் ரஞ்சன் சௌத்ரியின் சஸ்பெண்ட்  உத்தரவை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் மற்றும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.