1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 8 அக்டோபர் 2014 (20:38 IST)

தூய்மை இந்தியா திட்டத்தில் அனில் அம்பானி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று "தூய்மை இந்தியா' திட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி புதன்கிழமை தூய்மை பணி மேற்கொண்டார். 
 
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "தூய்மை இந்தியா' திட்டத்தை புது தில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அனில் அம்பானி, சச்சின் தெண்டுல்கர், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, சசி தரூர் உள்ளிட்ட 9 பிரபலங்களை இத்திட்டத்தில் பங்கேற்க வருமாறும், அவர்கள் 9 பேரும் தலா 9 பேரை இத்திட்டத்தில் பங்கேற்க செய்யுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
 
இதை ஏற்று மும்பையின் சர்ச்கேட் ரயில்வே நிலையத்தின் வெளியே புதன்கிழமை தனது நண்பர்களுடன் அனில் அம்பானி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.