1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜூன் 2025 (11:16 IST)

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

encounter
உத்தரப்பிரதேச மாநிலத்தில், மூன்று வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்த குற்றவாளியை போலீசார் என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில், கூலி தொழிலாளியின் மூன்று வயது பெண் குழந்தை சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அந்த குழந்தையை மறைவிடத்திற்கு தூக்கி சென்ற மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிவிட்டார்.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பிறகு, சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த தீபக் வர்மா தான் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த குற்றவாளி 20 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவர் போலீசாரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
 
இதில் பலத்த குண்டு காயமடைந்த தீபக், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை என்கவுண்டர் செய்ததை அடுத்து, அந்த பகுதி மக்கள் போலீசாரை கொண்டாடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran