1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. "Change Your Law": Supreme Court Slams Centre Over Teen Pregnancy Termination Order

கருக்கலைப்பு சட்டம் மாற வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

உச்ச நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 31 வார கால கருவை கலைக்க அனுமதித்த தனது முந்தைய உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியது. "நாங்கள் தனிநபர் தேர்வுகளை மதிக்கிறோம், நீங்களும் அதை செய்ய வேண்டும்" என்று நீதிபதி ஜோய்மால்யா பாக்சி தெரிவித்தார்.
 
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியது. 
 
பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் கர்ப்பம் போன்ற நேர்வுகளில் காலக்கெடு இருக்கக்கூடாது. காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது. சிறுமி ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதையும், அவரது மனரீதியான பாதிப்புகளையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை கட்டாயப்படுத்தி குழந்தையை பெற்றெடுக்க வைப்பது கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டனர்.
 
மருத்துவ ரீதியான சிக்கல்களை மத்திய அரசு முன்வைத்தபோதும், சிறுமியின் எதிர்காலம் மற்றும் அவரது மனநலனே முக்கியம் என்று கூறி, அரசின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இது பெண்களின் உடல் உரிமைகள் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கியத் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெயில் கொளுத்த போகிறது.. புதிய ஆய்வின் எச்சரிக்கை..!