1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (23:17 IST)

செல்போன்- ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை தாண்டியது

செல்போன்- ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை தாண்டியது

செல்போன் உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தொலைத் தொடர்பு மற்றும் தகவல்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது:-
 
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மின்னணு சார்ந்த தொழில்துறையில் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த முதலீட்டின் மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், 15 புதிய கைபேசி தொழிற்சாலைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2014-ம் ஆண்டு வரை ஆறு கோடியே 80 லட்சமாக இருந்த கைபேசி உற்பத்தி, கடந்த 2015 ஆம் ஆண்டில் பத்து கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.