1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 13 ஜூன் 2015 (09:57 IST)

காவிரி ஆற்றில் கழிவுநீர் வழக்கை சட்டப்படி சந்திப்போம்: கர்நாடகா அமைச்சர் எம்.பி.பட்டீல் தகவல்

காவிரி ஆற்றில் கழிவுநீர் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் தகவல் தெரிவித்துள்ளார்.


 
இந்த விவகாரம் குறித்து, பெங்களூருவில், கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவது குறித்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கர்நாடக மாநிலத்திற்கு  நோட்டீசு அனுப்பியுள்ளது. 
 
இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க கர்நாடகா அரசு தயாராக உள்ளது. தேவைப்படும் பட்சத்தில்  காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார்.