செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 14 மார்ச் 2015 (11:08 IST)

காவிரியின் குறுக்கே அணை கட்ட ரூ.25 கோடி: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்த கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய 2 இடங்களில் அணை கட்ட திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசு சார்பிலும், தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  
 
மேலும், விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கர்நாடக பட்ஜெட்டில் மேகதாதுவில் அணை கட்ட ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் சித்தராமையா நேற்று 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அந்த பட்ஜெட்டில் இது குறித்து கூறியிருப்பதாவது:- 
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 23 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.