1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2016 (14:34 IST)

இரக்கமின்றி குழந்தைகளுக்கு சூடு வைக்கும் பெண் பராமரிப்பளர் : அதிர்ச்சி விடியோ

அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், உணவு கேட்கும் குழந்தைகளுக்கு ஒரு பெண் சூடு வைக்கும் வீடியோ வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


 

 
ஆந்திரா தெலுங்கானா மாநிலம் காரிம் நகரில் உள்ள அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சில குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை இரு பெண்கள் கவனித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில், சாப்பிடுவதற்காக அமர்ந்திருக்கும் அந்த குழந்தைகளை இரக்கமின்றி ஒரு பெண் பராமரிப்பாளர் சூடு வைக்கும் வீடியோ வெளிவந்திருக்கிறது. ஒரு பெண் கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்குகிறார். அதன்பின், அதை மற்றொரு பெண்ணிடம் கொடுக்கிறார்.
 
சூடான அந்த கரண்டியால், அங்கு சாப்பிட அமர்ந்திருக்கும் ஒவ்வொரு குழந்தைகள் மீதும் அந்த பெண் சூடு வைக்கிறார்.  பாவம்.. வலி தாங்க முடியாமல் அந்த குழந்தைகள் வலியால் துடிக்கின்றன. 
 
கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல், அந்த பெண் அந்த செயலை சாதரணமாக இதை செய்கிறார். இதைக் கண்ட பலரும் சமூகவலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். அந்த பெண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 

Courtesy to ANI News