வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2016 (12:57 IST)

ஹெல்மெட் அணியாமல் காரில் பயணமா?- பாஜக பிரமுகருக்கு அபராதம் விதித்த போலீஸார்

காரில் ஹல்மெட் போடாமல் அமர்ந்திருந்ததாக டிரைவருக்கு பெங்களூர் போலீஸார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


பெங்களூரு மல்லேசுவரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். பாஜக பிரமுகரான இவருக்கு நேற்று முன் தினம் பெங்களூரு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராத ரசீது ஒன்று வந்தது. அதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயம்தான். அந்த அபராத ரசீதில்  அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு,  கடந்த 4ம் தேதி பசவேசுரா சர்க்கிளில் இந்த வாகனம் சென்ற போது, அதன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அதனால் ரூ. 100க்கு இந்த அபராத ரசீது அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எந்திர கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றார்.