வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (21:19 IST)

பாஜகவினர் மதத்தின் பெயரால் சண்டையிட விரும்புகிறார்கள் - சோனியா காந்தி தாக்கு

பாஜகவினர் மதத்தின் பெயரால் சண்டையிட விரும்புகிறார்கள் என்று சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
 
ஜம்மு - காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் 4ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தின் பேசிய சோனியா காந்தி, ‘‘சமீபத்தில் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய மந்திரி தகாத வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு எதிராக பா.ஜனதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் மக்களை சண்டையிட விரும்புகிறார்கள்.
 
பாஜக மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை மதிக்கவில்லை. அவர்களுடைய சாதுக்கள், ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு எதிரான தகாத வார்த்தைகளை கூறி சமுதாயத்தை பிரிக்க பார்க்கிறார்கள். நாங்கள் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள், தலித்துக்கள், மைனாரிட்டி மற்றும் பெண்கள் ஆகியோருக்கு உழைக்க இருக்கிறோம். அவர்களுக்கு அதிகாரம் வழங்க பாடுபடுவோம்.
 
ஊழலை எதிர்த்து போரிட, சாதாரண மனிதனும் கையில் எடுக்கும் கருவியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொடுத்தோம்’’ என்றார்.