வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (13:47 IST)

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டம்: உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதம்

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் இடையே இன்று நடைபெற்று வரும் இரண்டாவது நாள் ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. - ஆர். எஸ்.எஸ். இடையே மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தில்  கல்வி, பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்நிலையி்ல் இன்று நடைபெற்று வரும்  ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நாடா உள்ளிட்டோர் பங்கெடுத்துள்ளனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டு குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.