செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (18:40 IST)

காங்கிரஸ் அழிவுப் போக்கை கடைபிடிக்கும் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது: பாஜ கூட்டத்தில் தீர்மானம்

காங்கிரஸ் அழிவுப் போக்கை கடைபிடிக்கும் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது என்று பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மேலும், நாடாளுமன்றத்தை முடக்கும் நோக்கிலான காங்கிரஸின் குறுகிய செயல்திட்டங்கள், எதிர்காலத்தில், நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
திங்கட்கிழமையன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரை, 5 நாள்கள் இடைநீக்கம் செய்து, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை முடக்கும் நோக்கிலான காங்கிரஸின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.