1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (17:52 IST)

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய நாடு முழுவதும் தடை - மத்திய அரசு அதிரடி

பாஜக பொறுப்பேற்றதில் இருந்து இறைச்சிக்காக பசுக்கள் மட்டும் மாடுகள் கொல்லப்படக்கூடாது என வலியுறுத்தி வருகிறது. மேலும், மாட்டிறைச்சி தடை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.


 

 
இந்நிலையில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செயய் மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது. மேலும், கால்நடைகள் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சந்தைகளில் மட்டுமே விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனை செய்ய வேண்டும். அதுவும் விவசாய தேவைக்கு மட்டுமே. இதை மாடு விற்பவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
 
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின் படி பசு, அருமை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.