யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1.5 கோடி: நடிகை பிபாசா பாசு
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை பிபாசா பாசு ரூ.1.5 கோடி வாங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு, சர்வதேச யோகா தினத்தையோட்டி கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருந்தார். பிபாசா பாசு யோகா பயிற்சி பெற்றவர். தினமும் யோகா மற்றும் தியானம் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார்.
இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபாசா பாசுக்கு ரூ.1.5 கோடி கொடுக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் பிபாசா பாசு பெங்களூரு வந்து செல்வதற்கான விமான பயணச்செலவை கர்நாடக அரசே ஏற்றுள்ளது.