1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bengaluru Stadium Tragedy: 11 Dead in Crowd Rush, Police Officers Suspended

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

பெங்களூர்
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தின்போது  திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் பலியாகினர். இதனால் இந்த வெற்றி கொண்டாட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
 
கர்நாடக ஐகோர்ட் இது குறித்து தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், 11 பேர் உயிரிழப்பு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை நடத்த கர்நாடக அரசு நாணயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிபதி குன்ஹா தான் ஜெயலலிதா குற்றவாளி என சொத்து வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பெங்களூர் காவல் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை மற்றும் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!