செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2016 (15:59 IST)

மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது : ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இயங்காது என்று தெரிய வந்துள்ளது.


 

 
வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பனிச்சலுகை போன்றவை தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக்கோரி நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் நாளை (ஜனவரி 8) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
 
இதனால், நாளை 8 ஆம் தேதி, மாத இரண்டாம் சனிக்கிழமையான 9ஆம் தேதி, அதன்பின் ஞாயிற்றுக் கிழமை 10 ஆம் தேதி என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.