பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் தற்கொலை
பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் பாரதி(40) அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் பாரதி(40) அவரது வீட்டில் கதவு பூட்டப்படாத அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சடலத்தை மீட்டெடுத்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரதி வண்டியை விட்டு சென்றதால், கைவிடப்பட்ட வண்டியை கண்ட வண்டியின் உரிமையாளர் பாரதியை தொடர்பு கொள்ள முடியாமல், அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அந்த உரிமையாளர் காவல் துறைக்கு தெரிவித்துள்ளார்.
பாரதி தற்கொலை செய்து கொண்ட அறை பூட்டப்படாமல், இருக்கமாக மூடப்பட்டு இருந்துள்ளது. அதனால் காவல் துறையினர் பாரதியின் மரணத்தில் சந்தேகத்துடன் விசாரணை நடத்தி வருகினறனர்.