1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2015 (22:42 IST)

அசோக் சிங்கால் மறைவு: இந்து முன்னணி இரங்கல்

விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் அசோக் சிங்கால் மறைவுவுக்கு இந்து முன்னணி இரங்கல் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
உலக ஹிந்துக்கள் ஒன்று பட சிந்தனை செய்து செயல் வடிவம் தந்து இறுதி மூச்சு வரை தேசத்தை பற்றியே சிந்தனை செய்த மாமனிதன் அசோக் சிங்கால் தனது 89 வது வயதில் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தோம்.
 
ராம ஜென்ம பூமியில் ஸ்ரீராமனுக்கு ஆலயம் அமைக்க ஏஏகாத்மதா யாத்திரையை தேசம் முழுவதும் நடத்தியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. பாரதத்தின் அனைத்து சாலைகளும் அன்று அயோத்தியை நோக்கியை பயணிக்க வைத்தாய். இந்த தேசம் ஹிந்து தேசமாகும். ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் ஆலயம் கட்டப்படும். உங்கள் கனவும் பணியும் நிறைவேறும். கண்ணீர் அஞ்சலியுடன். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.