வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (11:26 IST)

நீயோ வெண்ணை; உன் கன்னமோ காஷ்மீர் ஆப்பிள்: நர்ஸை வர்ணித்த சர்ச்சை சாமியார்!

நீயோ வெண்ணை; உன் கன்னமோ காஷ்மீர் ஆப்பிள்: நர்ஸை வர்ணித்த சர்ச்சை சாமியார்!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமியார் அசராம் பாபு, மருத்துவமனையில் நர்ஸிடம் நீயோ உருகும் வெண்ணை; உன் கன்னம் தான் காஷ்மீர் ஆப்பிள் என வர்ணித்தார். இவர் 16 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்.


 
 
சாமியார் அசராம் பாபு 1997 முதல் 2006-ஆம் ஆண்டுவரை ஆஸ்ரமத்தில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என ஜோத்பூர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில் சிறையில் இருந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கும் முன்னர் சாப்பிட ஒரு பிரட் மற்றும் வெண்ணையை நர்ஸ் கொடுத்துள்ளார்.
 
அப்போது சாமியார் அசாராம், பிரட்டுக்கு வெண்ணை எதற்கு நீயே ஒரு உருகும் அழகிய வெண்ணை, உன் கன்னங்களோ இனிய சாறு ஊற்றும் காஷ்மீர் ஆப்பிள் மற்றும் தக்காளியை போன்று உள்ளது என வர்ணித்துள்ளார்.
 
சாமியாரின் இந்த நர்ஸ் மீதான வர்ணனைக்கு மருத்துவமனை நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்தது. தற்போது இது வைரலாக பரவி வருகிறது.