வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 31 மே 2016 (12:12 IST)

ரகுராம் ராஜன் மாற்றம்: பதில் அளிக்க மறுத்த அருண் ஜெட்லி

கடந்த சில நாட்களாக ரகுராம் ராஜனுக்கு எதிராக பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி புயலை கிளப்பி வருகிறார்.


 
 
ரகுராம் ராஜனை உடனடியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்ம் எனவும், அவரது பதவிக் காலத்தை மீண்டும் நீடிக்க கூடாது எனவும் வலியுறுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமி, ரகுராம் ராஜன் மீது தனிப்பட்ட விமர்சனத்தை வைத்து வருகிறார்.
 
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த மத்திய நிதியமைச்சர் நேற்று இது குறித்து பேசினார். அப்போது, விமர்சனம் என்பது கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் மீது தான் இருக்க வேண்டுமே தவிர தனி நபர்களின் மீது இருக்கக் கூடாது என்றார்.
 
இது போன்ற விமர்சனங்கள் யாரிடம் இருந்து வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஆளுநரும் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய நிறுவனம் ஆகும் என்று கூறினார். ஆனால் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அருண் ஜெட்லி மறுத்துவிட்டார்.