1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வியாழன், 7 ஜனவரி 2016 (20:33 IST)

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை நீதிபதி திடீர் மாற்றம்

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்குப் பதிலாக அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். 


 

 
 
கர்நாடக அரசு மற்றும் திமுக கட்சியும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தற்போது நீதிபதி மாற்றம் நடைபெற்றிருக்கிறது.
 
ஜெயலலிதா சொந்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை இதுவரை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வால் தற்போது மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இந்த மேல்முறையீட்டு வழக்கை தினம்தோறும் விசாரிப்பது குறித்து, நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் கொண்ட அமர்வு நாளை முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.