1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (07:58 IST)

அனில் அம்பானி செல்போனும் ஒட்டு கேட்கப்பட்டதா? நீளும் பட்டியலால் பரபரப்பு!

பெகாசஸ் செயலி மூலம் முக்கிய பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், திருமுருகன் காந்தி உள்பட பலரது செல் போன்கள் ஒட்டுக் கேட்டதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஸ்தம்பிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த செல் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மேலும் சிலரின் பெயர்கள் வெளி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த விவகாரத்தில் சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, அனில் அம்பானி, தலாய்லாமா என நீளும் பட்டியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து முக்கிய பிரபலங்களின் செல்போன்களை கொடுத்து கேட்கும் இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது