வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (23:19 IST)

அன்புமணி மீதான மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

பாமக எம்பி அன்புமணி மீதான மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 
மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி புகார் எழுந்தது. இதனையடுத்து, அவர் மீது சிபிஐ வழக்கு தெடார்ந்தது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கு, இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்புமணி மீதான குற்றசாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட இருந்தது. ஆனால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு வரும் டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.