தொடர்புடைய செய்திகள்
- தங்க கடத்தல் நடிகை ரன்யாவிடம் இருந்து விவாகரத்து கேட்கும் கணவர்.. நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
- கல்விக் கடன் வழங்க லஞ்சம் வாங்கிய புகார்.. வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை..!
- மர்ம உறுப்பில் தங்கத்தை வைத்து கடத்தினார் ரன்யா ராவ்.. பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!
- ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!
- நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!
தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரம்யா ராவ்-க்குச் சிறை தண்டனை குறித்த உத்தரவை நீதிமன்றம் வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயிலிருந்து 12.5 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மகள் ரன்யா ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து ரூ.2.67 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும், தண்டனை காலம் முழுவதும் அவருக்கு ஜாமீன் கோரும் உரிமை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
