1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 நவம்பர் 2025 (15:13 IST)

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!
மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள லலித்பூர் குளத்தில் நூற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள் ஒரு சாக்கில் கண்டெடுக்கப்பட்டதால், மாநிலத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணியின் நேர்மை குறித்து பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
 
கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான அட்டைகள் அருகிலுள்ள ஹமித்பூர் மற்றும் பிலா பகுதியை சேர்ந்தவை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இது தற்செயலான நிகழ்வு அல்ல என்றும், திட்டமிட்ட செயல் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
 
இந்த சம்பவம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் மோதலை உருவாக்கியுள்ளது. இது வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டுவதாக பாஜக குற்றம் சாட்டி, விளக்கத்தை கோரியுள்ளது.
 
இதற்கு பதிலளித்த திரிணாமுல் எம்.எல்.ஏ. தபன் சட்டர்ஜி, இவை போலி அட்டைகளாக இருக்கலாம் என்று கூறி, சர்ச்சைக்கு பாஜகவே காரணம் என்று குற்றம் சாட்டினார். காவல்துறை ஆதார அட்டைகளை கைப்பற்றி, அவை எவ்வாறு அங்கு வந்தன என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.
 
Edited by Siva