வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2015 (17:07 IST)

தனது குழந்தைக்கு தந்தை எனக் கூறும் 45 வயது பெண் மீது 14 வயது சிறுவன் பரபரப்பு புகார்

மத்திய பிரதேச மாநிலம் ஷடோல் மாவட்டம் கோபாரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உலைச்சலில் காணப்பட்டான். இதனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான்.  
 
இந்நிலையில் சிறுவன் போலீஸ் உயர் அதிகாரியிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில்,
 
தனது கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அவரது குழந்தைக்கு தன்னை தந்தை என்று கூறிவருவதாகவும், அந்த பெண்ணை தனக்கு தெரியும் ஆனால் அவருடன் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளான். மேலும் இந்த தகவலை கிராமம் முழுவதும் கூறிவருகிறார் என்றும், இதனால் தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது என கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.