1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (16:16 IST)

ஆந்திராவில் மூன்று சிறுமிகளை கற்பழித்த ஆசாமி

ஆந்திராவில் உள்ள சொப்பனான்டி என்ற இடத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த மூன்று சிறுமிகளை அந்த சூளையின் உரிமையாளரான 40 வயது ஆசாமி கற்பழித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லிங்கம்பள்ளி கிஷன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்களை வேலை செய்து வருகின்றனர். அக்குடும்பத்தை சேர்ந்த 13 வயது முதல் 15 வயதேயான சிறுமிகள் மூவரை அக்கொடூர ஆசாமி கற்பழித்துள்ளான்.
 
இது அச்சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்களை வெளியே கூறாக்கூடாதென அச்சுறுத்தியதால் அமைதியாகிவிட்டனர். தொடர்ந்து அந்த ஆசாமி சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் அரசு சாரா நிறுவனத்தை சார்ந்தவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
 
அந்நிறுவனத்தினர் இதை உதவி காவல்துறை கண்காணிப்பாளரான வேணுகோபால் ராவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். உடனடியாக காவல்துறையினர் அந்த செங்கல் சூளைக்கு விரைந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் தன்னை தேடி வருவதை மோப்பம் பிடித்த அந்த ஆசாமி அங்கிருந்து ஓடிவிட்டான். காவல்துறையினர் அவனை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.