வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2015 (02:07 IST)

மும்பையில் போலி மதுவுக்கு பலியான 13 அப்பாவி உயிர்கள் - 7 பேர் உயிருக்குப் கடும் போராட்டம்

மும்பை மால்வானியில் உள்ள லட்சுமி நகர் குப்பத்தில், போலி மதுபானம் அருந்திய 13 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். 
 

 
மும்பை புறநகர் பகுதி என்றழைக்கப்படும் மால்வானியில் உள்ளது லட்சுமி நகர் குப்பம். இந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் மது அருந்தியுள்ளனர். அவ்வாறு மது அருந்தியவர்களில் சிலருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 
 
இதனால், அவர்களை மலாட் மற்றும் சாந்திவலியில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், மது அருந்திய 13 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகின்றனர். 
 
தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், போலி மதுபானம் குடித்ததால் அவர்கள் இறந்திருப்பது தெரிய வந்தது. 
போலி மது விற்பனை செய்த ராஜு லங்க்டா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
பாேலி மது அருந்தி 13 பேர் பலியான சம்பவம் மகாராஷ்ட்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.