செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2015 (01:30 IST)

இன்று 12 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

கனமழை காரணமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
மதுரையில் இருந்து நள்ளிரவு புறப்பட வேண்டிய நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி ரயில் ரத்து செய்யப்படுகிறது.
 
சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ரயில் மற்றும்  சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
விழுப்புரம் - கரக்பூர் வாரம் இருமுறை ரயில் மற்றும் ஆழப்புலா - தன்பாத் விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மற்றும்  விஜயவாடா - சென்னை, சென்னை - விஜயவாடா பினாகினி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
கூடூர் - சென்னை, சென்னை டூ கூடூர் மற்றும் கூடூர் டூ சென்னை பயணிகள் ரயில்கள் மற்றும்  சென்னை எழும்பூரில் இருந்து கயா புறப்பட வேண்டிய வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுகிறது.
 
மேலும், சென்ட்ரல் - லக்னோ விரைவு ரயில், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரயிலும் ரத்து செய்யப்பட்டுளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.