1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க விரும்பும் இந்தோனேஷியா.. பிரதமர் மோடி முன் ஒப்பந்தம்...

இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க விரும்பும் இந்தோனேஷியா.. பிரதமர் மோடி முன் ஒப்பந்தம்...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மீதான உலகளாவிய அங்கீகாரமும் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேஷியா, தனது தேர்தல் முறையை நவீனப்படுத்த இந்திய விவிபேட்  மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளது.
 
தற்போது இந்தோனேஷியாவில் ஒரே நாளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 2029 பொதுத்தேர்தல் முதல் அங்கு இ-வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் ஜகார்த்தா பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தேர்தல் மேலாண்மை மற்றும் பிரத்யேக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றுமதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
 
இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது இந்தோனேஷிய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்திய தேர்தல் முறையை நேரில் பார்வையிட்டு, அது மிகவும் ஊக்கமளிப்பதாகப் பாராட்டினர். 
 
இந்தியாவில் 2004 முதல் நாடு முழுவதும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்திய தொழில்நுட்ப உதவியைப் பெற்றுள்ளன. நமீபியா நாடு இந்திய விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வணிக ரீதியாக இறக்குமதி செய்து தனது தேசியத் தேர்தல்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தலைமறைவான செந்தில் பாலாஜி!. தேடுதல் வேட்டையில் காவல்துறை!.. அடுத்து என்ன?...