தொடர்புடைய செய்திகள்
- உங்கள் வாக்கு எந்த வாக்குச்சாவடியில் உள்ளது? எப்படி அறிந்து கொள்வது? முழு விவரங்கள்..!
- 2 தொகுதிகளில் போட்டியிடுவது மக்களுக்கு செய்யும் துரோகம்.. விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்..!
- நான் என்றும் டேஞ்சர்தான்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!
- திமுக கூட்டணி கட்சிகளின் நிலைமை தான் எங்களுடைய நிலைமையும்: வானதி சீனிவாசன்
- 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.. பள்ளி திறக்கப்படும் தேதி என்ன?
நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை: போலீசார் அறிவிப்பு..!
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நாளான நாளை, பொதுமக்கள் தங்குதடையின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அருகே உள்ள மலைக்குப் பக்தர்கள் செல்வதற்கும் வனத்துறை தற்காலிகத் தடை விதித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்து, மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வழக்கம்போலப் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், மக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
Edited by Siva
