1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. Annamalai Claims No Case Registered Against Minister K.N. Nehru Despite ED Evidence

அமைச்சர் கே.என்.நேரு மீது இன்னும் வழக்கு பதியவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

அமைச்சர் கே.என்.நேரு
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகாரில் அமலாக்கத்துறை ஆதாரம் கொடுத்தும் இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறை கடிதத்தில், இது கட்சி நிதி தொடர்பானது என சுட்டிக்காட்டப்பட்டும், முதல்வர் மற்றும் அமைச்சர் நேரு தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பு வழங்கியதற்காக அவருக்கு எதிராக இம்பீச்மெண்ட் மனு கொடுக்கப்பட்டதை அண்ணாமலை கடுமையாகச் சாடினார். இது, "தீர்ப்பு கொடுத்தால் இப்படி நடக்கும் என நீதிபதிகளுக்கு பயத்தை திமுக கொடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
 
வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், குறைந்தபட்சம் 80 லட்சம் பேர் நீக்கப்பட வேண்டும் என்றார். கூட்டணி குறித்து,  ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேச முடியாது என்று கூறிய அண்ணாமலை, கூட்டணியில் யார் இணைவது என்பதை அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முடிவெடுப்பார்கள் என்றார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!