தொடர்புடைய செய்திகள்
- தங்கம் வாங்காதீங்க!.. மோடி சொல்லியும் மக்கள் கேட்கலயே!.. அட போங்கப்பா!...
- பிரதமர் மோடி சொல்லியும் தங்கம் வாங்குவதை குறைக்காத இந்தியர்கள்.. இறக்குமதி அளவு அதிகரிப்பு...!
- சென்னையில் 4 நாளில் 4000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!
- 10 நாளில் 10,000 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.30,000 குறைவு...
- ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுவிட்டதா? புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால் பரபரப்பு..!
அவசர அவசரமாக தங்கத்தை விற்கும் பொதுமக்கள்.. 3 மாதங்களில் 50000 கிலோ விற்பனையா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், விலை மேலும் குறையும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்களின் நகைகளை அவசரமாக விற்பனை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை வீழ்ச்சி பயம் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பொதுமக்கள் தங்களிடமிருந்த சுமார் 50,000 கிலோ பழைய தங்க நகைகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது 40 சதவீதத்திற்கும் மேல் அதிகம் என்று தங்கம் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் தங்கம் விலை சரிந்து வந்த சூழலில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.150 உயர்ந்து 13,400 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.107,200 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
மறுபுறம் வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.250 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000 என்றும் சந்தையில் விற்பனையாகி வருகிறது. விலை வீழ்ச்சிக்கு அஞ்சி பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை விற்ற நிகழ்வு சந்தை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
