வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Sasikala
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (16:04 IST)

சுவை மிகுந்த காளான் மசாலா

சுவை மிகுந்த காளான் மசாலாவை செய்து அனைவரையும் அசத்துவோம்


 

தேவையான பொருட்கள்:
 
காளான் - 1/2 கிலோ
சோள மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 150 கிராம்
தேங்காய் பூ - 1/4 முடி
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1
சோள மாவு 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
1. காளானை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கி கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் மிள்காய், மஞ்சத்தூள், கறிமசலாத்தூள், மற்றும் 
சோள மாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 
2. காய்ந்த எண்ணெயில் பிசைந்த காளான் மாவை பொரித்து எடுக்கவும். பச்சை மிளகாய், பூண்டு, கசகசா இவற்றை மிருதுவாக அரைக்கவும்.  
 
3. வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வ்தக்கவும். அதனுடன் அரைத்த பூண்டு, பச்சைமிளகாய், கசகசா விழுதை சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். பின்பு மீதமுள்ள மசாலா தூள்களை சேர்த்து கிளறவும். 
 
3. பொரித்து வைத்திள்ள காளானை 5 நிமிடங்கள் கழித்து போட்டு கிளறி தேவையான உப்பு சேர்த்து கிளறவும் இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
 
அருமையான காளான் மசாலா தயாராகிவிட்டது.