தனியாவின் மணம்
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
புளிக்குழம்பு வைக்கும் போது காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
ரசப்பொடியிலும் தனியாவை சிறிதளவு சேர்த்து அரைக்கலாம். மணமாக இருக்கும்.