இந்தியாவின் முதல் ஆன்லைன் சிறுகடன் இணைய தளமான ரங்தே-வை உருவாக்கியவர்கள் ராம் என்.கே மற்றும் ஸ்மிதா ராம். சமூக அக்கறை கொண்ட கடன் தருபவர்களையும், கடன் தேவைப்படும் ஏழை மக்களையும் இணைப்பதற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.
இலாப நோக்கமில்லாமல் துவக்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தின் நோக்கம், இந்திய கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதுதான் என்று இதை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.