ஜூன் மாதம் அறிமுகமாகும் Vivo X Fold 6.. ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த புரட்சி
ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய போன்களுக்கான மவுசு அதிகரித்து வரும் நிலையில், Vivo மற்றும் Xiaomi நிறுவனங்களின் அடுத்தகட்ட தயாரிப்புகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vivo நிறுவனம் தனது Vivo X Fold 6' மாடலில் பேட்டரி மற்றும் கேமரா துறையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய Vivo போனில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 7,000mAh திறன் கொண்ட மிகப்பெரிய பேட்டரி இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தபோதிலும், போன் மெல்லியதாகவும் எடை குறைந்ததாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில் 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூன் மாத வாக்கில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
மறுபுறம், Xiaomi நிறுவனம் தனது 'மிக்ஸ் ஃபோல்ட் 6' மாடலை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதில் சியோமியின் சொந்த தயாரிப்பான 'Xring O3' சிப்செட் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்சங் மற்றும் ஹானர் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, Vivo மற்றும் Xiaomi நிறுவனங்களின் இந்த புதிய வரவுகள் மடிக்கக்கூடிய போன் சந்தையில் ஒரு புதிய போரை தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
Edited by Siva