வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 18 மே 2015 (14:11 IST)

அனுஷ்கா சர்மாவை சந்தித்து வம்பில் மாட்டிக் கொண்ட விராட் கோலி

போட்டியின்போது விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவை சந்தித்தது விதிமுறையை மீறிய செயல் என புகார் எழுந்துள்ளது.
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை [17.05-15] ஐபிஎல் போட்டியின் 55ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி டேர் டேவில்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
 

 
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 1.1 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது விராட் கோலி 1 ரன்னுடனும், கிறிஸ் கெய்ல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 

 
அப்போது பெய்த தொடர்மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனைத் தொடர்ந்து பெவிலியன் திரும்பிய விராட் கோலி சிறிது நேரத்தில் பார்வையாளர் பகுதியில் இருந்த தனது காதலி அனுஷ்கா சர்மாவை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக்கும் ஆகியோரும் இருந்தனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

இது போட்டியின் விதிமீறலாக கருதப்படுகிறது. அதாவது ஆட்டத்தின் முடிவு தெரியும்வரை அல்லது கடைசி பந்து முடியும் வரை வீரர்கள்  தங்களுக்கு உரிய பகுதியில் இருந்து சென்று வேறு ஒருவரை சந்திக்க கூடாது என்பது விதியாகும்.
 

 
ஆனால் வீராட் கோலி அனுஷ்காவை சந்தித்தது ஊழல் தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய செயலாகும். மேலும், அவர் பெங்களூரு அணியின் கேப்டன் என்பதால் விதிமுறைகள் அவருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.