1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (09:26 IST)

ஐபிஎல்: ஐதராபாத் அதிரடியில் பணிந்தது சென்னை

நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி 22 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய 2 ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் கேப்டன் வார்னர் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்துவிட்டார்.
தொடர்ந்து அசத்திய வார்னர் 20 பந்தில் அரைசதத்தை எட்டினார். பின்னர் ரெய்னாவிடம் விக்கெட்டை பரிகொடுத்த வார்னர் 61 ரன்களில் வெளியேறினார். பின் வந்த வீரர்களும் பொறுப்புடன் விளையாட இறுதியில் ஐதராபாத் அணி 192 ரன்களை எடுத்தது.
 
பின்னர் கடின இலக்கை நோக்கி ஆட வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கியது சென்னை அணி. இதில் தொடக்க வீரர்கள் சுமித், மெக்கல்லம் இருவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ரெய்னாவும் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
பின் இணைந்த டு பிளி.சிஸ், தோனி இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் டு பிளிசிஸ் ரன் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கே மாறியது. மறுமுனையில் தோனியும் நடையை கட்டினார். பின் வந்த சென்னை வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும் இறுதியில் 20 ஓவர் முடிவில் அவர்களால் வெறும்  170 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது.