1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 13 ஏப்ரல் 2015 (10:12 IST)

கோடை கால குறிப்புகள்

கோடை காலம் தொடங்கி விட்டதால் சிறுவர்கள் எல்லாம் விடுமுறையை கொண்டாட குதூகலமாய் இருக்க, பெரியவர்களோ கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று திகைத்து கொண்டிருப்பர். இதோ அவர்களுக்கான சில எளிய கோடை கால குறிப்புகள்.
 

 
கோடை காலங்களில் திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
 
மேலும் தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பின்னர் குடிக்க வேண்டும்.
 
தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்.
 
மேலும் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் கோடையில் வெளியேறும் வியர்வைக்கு ஈடாகும்.
 
மோர், இளநீர் ஆகியவற்றை பருகலாம்.