1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Thiruchendur Murugan Temple: The Miraculous Panneer Ilai Vibuthi and Its Golden Secrets!

திருச்செந்தூர் முருகன் கோவில்: அற்புதங்கள் நிறைந்த பன்னீர் இலை விபூதி!

: திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, தீராத நோய்களையும் குணப்படுத்தும் அருமருந்தாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த விபூதி சாதாரணமானது அல்ல, அதன் பின்னணியில் பல ஆச்சரியமூட்டும் கதைகள் உள்ளன.
 
முருகப்பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்களில் உள்ள நரம்புகளை போலவே, இந்த இலையிலும் பன்னிரண்டு தனித்த நரம்புகள் காணப்படுவதால்தான், ஆரம்பத்தில் இதனை 'பன்னிரு இலை' என்றே அழைத்து வந்தனர். காலப்போக்கில், அது மருவி 'பன்னீர் இலை' என்று ஆகிவிட்டது.
 
தல வரலாறுபடி, அந்த காலத்தில் கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, கூலியாக இந்த பன்னீர் இலை விபூதியே பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. பணி முடிந்ததும், கூலியை பெற்றுக்கொண்டவர்கள், அருகிலுள்ள தூண்டிகை விநாயகர் கோவிலை கடந்து சென்று, அந்த இலை விபூதிப் பிரசாதத்தை திறந்து பார்த்தால், அவர்களுக்குரிய கூலி தங்கக் காசுகளாக மாறியிருந்ததாம்!
 
இது வெறும் விபூதி மட்டுமல்ல, முருகப்பெருமானின் திருவருள் நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த பிரசாதம் என்பதை இந்த வரலாறு உணர்த்துகிறது. பக்தர்களின் நோய்களை தீர்ப்பதுடன், இறைப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு அருள்வழங்கும் அற்புத பிரசாதமாகவே பன்னீர் இலை விபூதி திருச்செந்தூரில் திகழ்கிறது.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்! இன்றைய ராசி பலன்கள் (07.08.2025)!