வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (12:28 IST)

புற்று நோயை குணப்படுத்தும் தூதுவளையின் மருத்துவ குணங்கள்

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது புற்று நோய், ஆஸ்துமா, இரத்த சோகை, தாம்பத்ய குறைபாடு, இருமல் முதலிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

* தூதுவிளங்காயை மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு குளிர் மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் குறையும். மேலும் நுரையீரல் வலுவடையும்.

* தூதுவளைப் பொடியை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும்.

* தூதுவளைப் பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்தம் விருத்தி அடையும்.

* தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்திற்கு இரண்டு நாள் பயன்படுத்தினால் வாயு பிரச்சனை சரியாகும். மூலரோகப் பிணிகள் குறைந்து தாம்பத்ய உறவு மேம்படும்.



* ஆஸ்துமா நோயாளிகள், வெறும் வயிற்றில் காலை வேளையில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கலாம்.

* தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

* தொண்டைப் புற்று நோய், கருப்பை புற்று நோய், வாய்ப்புற்று நோய் ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு தூதுவாளை நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

* புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.