செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sasikala
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2016 (14:32 IST)

சமையல் எரிவாயு நேரடி மானியத்தால் ரூ.1,764 கோடி சேமிப்பு

சமையல் எரிவாயு நேரடி மானியத்தால் ரூ.1,764 கோடி சேமிப்பு

சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிகளில் சேர்ப்பிப்பதால் அரசுக்கு 1,764 கோடி ரூபாய் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தணிக்கைக் குழு நேற்று தெரிவித்துள்ளது.


 


ஆனால் மத்திய அரசு 2014-15 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் இந்த இருமுக சமையல் எரிவாயு மானியத் திட்டங்களின் மூலம் ரூ.22,000 கோடி சேமிக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் சிஏஜி ஸ்ரீசசி காந்த் சர்மா கூறியிருப்பதாவது, 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 12,084.24 கோடி ரூபாய் மானியம் வழங் கப்பட்டிருக்கிறது. 
 
2014-ம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 35,400.46 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கை யில் 23,316.12 கோடி ரூபாய் மானியம் குறைந்துள்ளது. 2015-16ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் ஒரு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
சமையல் எரிவாயு மானியம் பெறும் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மானியத்தை செலுத்தும் திட்டத்தின் மூலம் போலியான இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் எளிதாக கண்டறியப் படுகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்