இத்தனையாண்டுகாலம் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய புயல்கள் உருவாகி வருவதற்குக் காரணம் புவி வெப்பமடைதலே அல்லது குளோபல் வார்மிங்கினால் ஏற்படும் வானிலை மற்றம், கடல்நீர் மாற்றம் ஆகியவையே என்று விஞ்ஞானிகள் சுமார் 30 ஆண்டுகாலமாக கதறி வருகின்றனர். ஆனால் அமெரிக்காவிலும் சரி எந்த நாட்டிலும் சரி எந்த அரசியல்கட்சிகளும் விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.