வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (14:12 IST)

ஜிம்பாப்வே தொடர் கேப்டனாக ரகானே நியமனம்: முன்னனி வீரர்களுக்கு ஓய்வு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு இன்று அறிவித்தது.
இதில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னனி வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில் முரளி விஜய்,அம்பதி ராயுடு, மனோஜ், கெடர், ராபின் உத்த்ப்பா,மனிஷ் திவாரி, ஹர்பஜன் சிங், அக்ஷர் படேல், கர்ண், தவால், ரோஜர் பின்னி, புவனேஷ்குமார், மொகித், சந்தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்.